இடுகைகள்

ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா?

படம்
வேறு ஒருகளத்தில் கேட்கப்பட்ட வினா பேரளவான விடைகளை எதிர்நோக்கும் அந்த வினா:  ஒருவர் பணம் சம்பாதிக்கிறதுக்கு எது மிகவும் கட்டாயம், அறிவா? வலிமையா? முதலாவது விடை: விடையாளர்: குமரிநாடன். சென்னை. பணத்தை பேரளவாக ஈட்டுவதற்கு பணத்தைக் கொண்டாடி இருக்க வேண்டும்.  அதற்குத் தேவையான அறிவையும், வலிமையையும் இன்னும் பல ஆயிரம் காரணிகளையும் கடவுள் ஒருங்கிணைத்துத் தரும். இதுவரை உங்களுக்குக் கிடைத்தவை அத்தனையும் நீங்கள் கடவுளிடம் கேட்டவை மட்டுமே. ஒவ்வொரு தற்பரை நேரமும் உங்கள் செயல், எண்ணம், நீங்கள் பேசும் தமிழின் அத்தனைச் சொற்களும் கடவுளில் பதிவாகிறது. அவற்றில் இருந்தே உங்களுக்கான கேட்பைக் கடவுள் புரிந்து கொள்கிறது. ஐந்து அகவை வரையிலான குழந்தைகளும், வெற்றியாளர்களும் இயல்பூக்கமாக தாங்கள் அடைந்த வெற்றிகளை மட்டுமே கொண்டாடி பேரளவு வெற்றிகளைக் குவிக்கின்றனர். அனைவருமே இவ்வாறான வெற்றிகளை குவிப்பது எப்படி என்பதை, ஐந்து அகவை வரையிலான குழந்தைகள் தமிழை முழுமையாகக் கற்றுத் தேர்வதில் இருந்து மந்திரம் என்கிற ஐந்தாவது முன்னேற்றக் கலையை நிறுவியுள்ளனர், தமிழ்முன்னோர். ஒவ்வொரு தற்பரை நேரமும் உங்கள் செயல், எண்ணம்,...

ஆண்களுக்கு, எந்த அகவையில் பெண்களின் மையல் (மோகம்) அறவே இல்லாமல் போகும்?

படம்
 வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினா: பேரளவான விடைகளை எதிர்நோக்கும் வினா: ஆண்களுக்கு, எந்த அகவையில் பெண்களின் மையல் (மோகம்) அறவே இல்லாமல் போகும்? விடையாளர்:  குமரிநாடன். சென்னை. முதலாவது விடை:   வினா குறிக்கிற அந்த மையல், அறவே இல்லாமல் போவதற்குத் திருமணமே எல்லையாக முடியும். அகவை அல்ல! தமிழ் முன்னோர் திருமணம் என்கிற உயர்ந்த கட்டமைப்பை உருவாக்கியதும்,  அது உலகிற்கே கொடையானதும் இந்த நோக்கம் பற்றியதே. திருமணமான பிறகு மனைவியை உயிராக காதலிக்கிற எந்த ஆணுக்கும் இன்னொரு பெண் ஒரு பொருட்டாகவே மாட்டாள். பாவேந்தர் பாரதிதாசன் குடும்பவிளக்கில், முதுமைக் காதல் குறித்து எழுதியுள்ளதைப் பாருங்கள். ஒருவனும் ஒருத்தியும் அன்பு கொண்டு வாழும் வாழ்க்கையைக் காதல் வாழ்க்கை என்கிறோம். இந்தக் காதல் வாழ்க்கை இளமையில் இனிப்பாய் இருப்பதைப் பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். ஆனால், முதியோரிடம் உண்டாகும் காதல் வாழ்க்கையைப் பாரதிதாசன் அழகாகக் காட்டியுள்ளார். முதியவளின் உடலில் பளபளப்போ அழகோ இல்லை. என்றாலும் முதியவர், அவள்மேல் கொண்டிருந்த காதல் மாறவில்லை. இதற்கு அடிப்படை அவர் அவரின் மனைவி மீது உயிர...

இந்தோனீசியா வரை கடல் கடந்து வென்று, ஆசியாவின் மிகப்பெரிய போர்ப் படை ஆற்றலாக இருந்திருந்தார் இராசேந்திர சோழன் என்பதை விளக்க முடியுமா?

படம்
நான்:  வெண்ணிலா, ஈரோடு. பேரளவான விடைகளை எதிர்நோக்கும் என் வினா: இந்தோனீசியா வரை கடல் கடந்து வென்று, ஆசியாவின் மிகப்பெரிய போர்ப் படை ஆற்றலாக இருந்திருந்தார்       இராசேந்திர சோழன் என்பதை விளக்க முடியுமா?  விடையாளர்:  நிலவு. சென்னை. முதலாவது விடை:   உங்கள் வினாவுக்கான விளக்கமாகத் தெரிவிக்கப்படுகிறது, பிபிசியின் செய்தி சேகரிப்பு பிரிவின் இந்தக் கட்டுரையில்.  ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 850 வாக்கில்) தென் இந்தியாவில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட விசயாலயச் சோழன் எனும் மன்னர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.  சோழப் பேரளுமையின் அடித்தளம் இவ்வாறு தான் நிறுவப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் (கிபி 907 ஆம் ஆண்டு) சோழப் பேரளுமையில். முதலாம் பராந்தக மன்னர் அரியணை ஏறி 48 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர்வந்த, வலிமையிலா மன்னர்களால் சோழப் பேரளுமை சரியத் தொடங்கியது. கிபி 985 ஆம் ஆண்டு, முதலாம் இராசராச சோழன் அரியணை ஏறியபோது சோழப் பேரளுமை மீண்டும் எழத் தொடங்கியது. முதலாம் இராசராச சோழன் ம...

தமிழ் மொழியின் சிறப்புகள் என்னென்ன?

படம்
பேரளவான விடைகளை எதிர்நோக்கும் என் வினா: தமிழ் மொழியின் சிறப்புகள் என்னென்ன? நான்: வெண்ணிலா, ஈரோடு.

வினாவுக்குவிடைகள்! இணையத்தளம் வரவேற்கிறது

படம்
இணையத்தேடல் மற்றும் பேரளவு கற்றல் முயற்சிக்கு, ஊக்கம் ஊட்டும் வகைக்கு, தமிழில் ஒரு புதிய தொடக்கம்! 'வினாவுக்குவிடைகள் ' இணையத்தளம். தேடல் பயணத்தில் ஓடலாம் வாங்க. நீங்களும். பொதுமக்களின் வினாக்களுக்கு பொதுமக்களிடம் இருந்தே விடைபெறுவதற்கான இணையத்தளமே, 'வினாவுக்குவிடைகள்' என்கிற இந்த இணையத்தளம். ஒருவர் கேட்ட வினாவிற்குப் பலரின் பல்வேறு விடைகளைப் பெற்றுத்தரும் நோக்கத்திற்கானது இந்த இணையத்தளம். உங்கள் வினாக்களை,  வினா மற்றும் விடைகளை, அனுப்புதற்கான படிவம்.  சென்று பதிவிட்டால், அதை வினாஇடுகையாக வெளியிடுவோம்.  அந்த வினாஇடுகைக்கான   விடை யைப்  பொதுமக்கள் யாரும்  அளிக்கலாம்.  உங்கள்  விடை யை ,  வினா மற்றும் விடைகளை,  அனுப்புதற்கான படிவம். சென்று பதிவிட்டால், அதை விடைஇடுகையாக வெளியிடுவோம்.  வினா மற்றும் விடைகளை  அனுப்புதற்கான படிவம் எங்கே உள்ளது தெரியுமா? இந்த இடுகையின் தலைப்பில் இடப்பக்கம் மூன்று கிடைக்கோடுகள் தெரியும். அந்தக் கிடைக்கோடுகளைத் தொட்டால் வினா மற்றும் விடைகளை,  அனுப்புதற்கான படிவம்,  கிடைக்கும். வினா ...